Saturday, December 16, 2006

காதல் ஒரு இனிய விஷம்

காதல் ஒரு இனிய விஷம் அன்று காதல் காதல் என்று கவி சிந்தி காவியமாக்கினாய் நம் காதலை இன்று காதலை காணல் நீராக்கி விட்டாயே. காலத்தையும் கனிய வைப்பேன்.. என நம்பிக்கை தந்தாய் இப்போ.. என்னையும் மறந்து காலத்தையும் மறந்து நேரத்தையும் மறந்து தூங்குகின்றாயே . உனக்காக எதையும் தியாகம் செய்வேன் காதலை மட்டும் தியாகம் செய்து கொள்ள மாட்டேன் . உன்னை நினைத்து கண்ணீர் சிந்தியும் காதல் கரைந்து போகவில்லை என்னும்.

Thursday, December 14, 2006

காதல் ஒரு இனிய விஷம் 6என் மனதில் ஆயிரம் சுமைகள் உன் சுமைகளை சுமந்து கொள்வதால். ----- உனக்கென நான் பிறந்ததால் தான் நான் தூரத்தில் இருந்தாலும் நீ.. ரசிக்கின்றாய். ----- என் மனதை நான் தேடுவதில்லை.. அது உன்னிடம் சுற்றி கொண்டு இருப்பதால். -------- மழை வந்தால் தான் எனக்கு பிடிக்கும் அப்போதுதான் இருவரும் ஒரு குடைக்குள் செல்லல..முடியும் .--------- ராகினி.

Wednesday, December 06, 2006

நான் பூவை ரசிக்கவில்லை. அதில் வீசிய நறுமணம் போனதால். நான் பறவையை ரசிக்கவில்லை. இதன் சிறகுகள் உடைந்ததால்.

Tuesday, December 05, 2006

காதல் ஒரு இனிய விஷம் 5 மறக்கவில்லை நினைக்கின்றேன் உறங்கவில்லை துடிக்கின்றேன் உன்னை சுமந்து ---- தீபாவளியில் தீபம் ஓய்ந்தாலும் என் இதய ஒளியில் நீ..என்றும் ஓய.. மாட்டாய். -- உன் கையில் இருப்பது மது பாணம் அதனுள் கலந்தது என் ரத்ததானம் --- செந்தமிழ் சொல் கொண்டு கவி சிந்தும் உன் செவ்விதழில் நான் சிந்திய... முத்தம்ஒன்று தான் நீ.. நித்தம் குடிக்கும் தேனீர். ராகினி

Monday, November 20, 2006

காதல் ஒரு இனிய விஷம் 3 என்னை புரிந்தும் நீ.. அலர்ச்சியம் செய்து என் மரணவா.. சாலை திறக்கின்றாய். -- என்னை ஆட்கொண்ட உன் காதல் சாம்றாச்சியம்.. தான் உன்னை விட்டகலாதிருக்கச்.. செய்கின்றது. --------- காலமும் நேரமும் தூரமும் நம் காவியக்காதலை அழிக்க முடியாது நம்மைபிரிக்கவும் முடியாது என்ற நீ..யே என்னை பிரிந்து விட்டாயே..
காதல் ஒரு இனிய விஷம் 2 உனக்கும் நட்சத்திரத்திற்கும் என்ன வித்தியாசம். உன்னை கண்டதும். நான் கண்ட கனவு நினைவாகிப் போயின. --------- நீயும் நானும் இப்படியே இருப்ப.. தென்றால் நம்மிடம் இருக்கும் வேண்டாத விடயங்ளை மாற்ற வேண்டும் ------- நீயும் நானும் சந்திப்பது காதல் அல்ல இருவரும் ஒரே பாதையில் தேடிப்போவது தான் காதல் .-------- நீ.. அருகில் இருந்தும் எனக்கு இல்லாதது போல் உள்ளது. -------- உனக்காக.. என்னை மாற்றியது நான் செய்த தவறு என்றுபுரிந்து கொண்டேன் ---- உன்னை பாராமலும் உன்னை சேராமலும் இருக்கும் போதே.. என் இதயத்தை தொலைத்து விட்டேன். உன்னிடம்.

Saturday, November 18, 2006

காதல் ஒரு இனிய விஷம்

காதல் ஒரு இனிய விஷம் 1 காதல் பாதையில் துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் துன்பங்களில் காதல் ஒரு பரீட்சை --- நீ சிந்திய வார்த்தைகளை என் கையில் எழுதியுள்ளேன் நீ என் இதயத்தை திருப்பி.. தரும் வரை. --- நீ..கெஞ்சி கெஞ்சி கேட்டு வாங்கிய முத்தங்கள் எல்லாம்.. தொலைபேசி வழியால் தொலைந்து போயின.