skip to main |
skip to sidebar
காதல் ஒரு இனிய விஷம்
காதல் ஒரு இனிய விஷம்
அன்று காதல் காதல்
என்று கவி சிந்தி
காவியமாக்கினாய்
நம் காதலை
இன்று
காதலை காணல்
நீராக்கி விட்டாயே.
காலத்தையும் கனிய
வைப்பேன்..
என நம்பிக்கை தந்தாய்
இப்போ..
என்னையும் மறந்து
காலத்தையும் மறந்து
நேரத்தையும் மறந்து
தூங்குகின்றாயே .
உனக்காக எதையும்
தியாகம் செய்வேன்
காதலை மட்டும்
தியாகம் செய்து
கொள்ள மாட்டேன் .
உன்னை நினைத்து
கண்ணீர் சிந்தியும்
காதல் கரைந்து
போகவில்லை
என்னும்.
1 comment:
உனக்காக எதையும்
தியாகம் செய்வேன்
காதலை மட்டும்
தியாகம் செய்து
கொள்ள மாட்டேன் .
எல்லாக் கவிதையும் மிகவும் நன்றாக உள்ளது தொடருங்கள்......
Post a Comment